நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

தாராபுரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக 6 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த 1985ம் ஆண்டு தாராபுரத்தில் மருவூர் அம்மன் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.

இந்த நிதி நறுவனத்தில், ஆர்.என். பழனிச்சாமி, ராஜேஸ்வரி, கந்தசாமி, சிவசுப்ரமணியன், குருசாமி, நல்லசாமிஆகிய 6 பேரும் பங்குதாரர்களாக இணைந்து நடத்தினர்.

நிதி நிறுவனம் வழங்குவதாகக் கூறிய அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு டெபாசிட் செய்தனர். சுமார் ரூ.50 லட்சத்திற்கும்மேல் டெபாசிட் வசூலானது. இந்நிலையில், டெபாசிட் தொகை முதிர்வு அடைந்தவுடன் பலர் திரும்பக் கேட்டனர்.ஆனால், நிதி நிறுவனம் பணத்தை திரும்ப அளிக்க இயலவில்லை.

எனவே, இது குறித்து டெபாசிட்தாரர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் மற்றும் நிர்வாகத்தினர்6 பேரும் தலைமறைவாகி விட்டனர். இவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+