குஜராத்தில் கடும் மழை: 20 பேர் பலி
காந்திநகர்:
குஜராத் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் கடும் மழைக்கு இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர்.
கடும் மழையினால் கடலோரப்பகுதியில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குக் குடிபெயர்ந்துள்ளனர்.
குஜராத்தில், கடந்த ஜனவரி 26 ல் ஏற்பட்ட பூகம்பத்தின் கோரப்பிடியில் சிக்கி ஆயிரக்கணக்கானோர்பலியானார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீளுமுன், தற்போது கடும் மழை பெய்து பலரைபலிவாங்கியுள்ளது. பூகம்பத்தில் படு மோசமாகப் பாதிக்கப்பட்ட கட்ச் பகுதியில் கடந்த 24 மணிநேரத்தில் அடைமழை பெய்துள்ளது.
கடந்த ஒரு வாரமாகப் பெய்து வரும் மழையையடுத்து, வீடுகள் இடிந்து விழுதல், இடி மின்னல் போன்றசம்பவங்கள் நடந்தன.
குஜராத்தில் உள்ள பல அணைகளில் நீர் நிரம்பி வழிகின்றது. வெள்ளப்பெருக்கு அதிகம் இருப்பதால் பயிர்களுக்குஅதிக அளவில் சேதம் ஏற்படும் என்று தெரிகிறது.
குஜராத் மாநிலத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ ஏற்படும்என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜாம்நகர், ஜூனாகார் மற்றும் அம்ரேலி பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications