ஈரானிலுள்ள இந்திய தூதரகத்தில் குண்டுவெடிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

ஈரானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள சாஹேடான் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய தூதகரத்தில்குண்டுவெடித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தில் வியாழக்கிழமை குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில்அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும்பத்திரமாக உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து ஈரான் போலீஸார் புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் கிடைக்கும்தகவல்களை ஈரானுக்குத் தொடர்பு கொண்டு கேட்டு வருகிறோம் என்றார்.

முன்னதாக, இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் குறித்து ஈரான் பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்தியில்,ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தில் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் தூதரக ஜன்னல் கதவுகள்உடைந்தன. தூதரகம் அருகிலுள்ள சில கட்டிடங்களும் சேதமடைந்தன.

குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம்தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+