டெல்லிக்கு பலூனில் பறந்து வர முஷாரப்புக்கு வேண்டுகோள்
டெல்லி:
பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ஜூலை மாதம் இந்தியாவிற்கு வரும் பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரப், பலூனில் பறந்து வர வேண்டும் என்று முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் கோரியுள்ளார்.
பலூன் க்ளப் ஒன்றை நடத்தி வரும் வி.பி. குப்தாதான் அந்த முன்னாள் எம்.பி. காஷ்மீர் பேச்சுவார்த்தைக்கு வரும்முஷாரப், பலூனில் இங்கு வருவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார் அந்த எம்.பி.
முஷாரப்பை வரவேற்க அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் இந்தியா செய்து கொண்டிருப்பதால், அவர்தைரியமாக பலூனில் வரலாம் என்று கூறுகிறார் குப்தா. கடந்த ஆண்டே இஸ்லாமாபாத்தில், முஷாரப்பைச்சந்தித்தபோது, இதுபற்றி அவரிடம் வேண்டுகோள் விடுத்ததாகவும் குப்தா கூறினார்.
தற்போதும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் ஹைகமிஷனர் அஷ்ரப் ஜஹாங்கீர் மூலம், முதற்கட்டவேண்டுகோளைக் கடிதம் மூலம் அனுப்பியுள்ளார் குப்தா. முஷாரப்பின் பதிலை இந்த முன்னாள் எம்.பி. குப்தாஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications