மாநகராட்சி பள்ளிகளின் சாதனை
சென்னை:
சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் பத்தாவது வகுப்புத் தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த 6835 மாணவ, மாணவிகள் பத்தாவது வகுப்புத் தேர்வு எழுதினர்.இவர்களில் 55 சதவீதம் பேர் பாஸ் செய்துள்ளனர். அதாவது 3780 பேர் தேர்ச்சி பெற்றனர்.
சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி மகேஸ்வரி 475மார்க்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். நுங்கம்பாக்கம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்தஷோபனா 462 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார். 3-வது இடத்தை சூளை ரோட்லர்தெரு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மைமுல் உன்னிசா பெற்றுள்ளார். இவர் பெற்ற மதிப்பெண்கள் 461 ஆகும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலான அளவில் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் தேர்ச்சிபெற்றுள்ளதாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.