For Daily Alerts
Just In
சென்னை டாக்டர் காஞ்சி. சாலை விபத்தில் சாவு
சென்னை:
சென்னையைச் சேர்ந்த டாக்டர் காஞ்சிபுரம் அருகே நடந்த சாலை விபத்தில் பலியானார்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் வசித்து வந்தவர் ரவீந்திரன் பத்மநாபன். இவர் அடையாறு மலர்மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
திங்கள்கிழமை காலை தனது டயோட்டா காரில் பெங்களூருக்குச் சென்றார். காரை கோவிந்தராஜ் என்பவர்ஓட்டினார். இவர்களது கார் காஞ்சிபுரம் அருகே செட்டியார்பேட்டை என்ற இடத்தில் வந்தபோது முன்னால்சென்று கொண்டிருந்த லாரி திடீரென நின்றது. திடீரென லாரி நின்றதால் பின்னால் வந்து கொண்டிருந்த டாக்டரின்கார், அதை எதிர்பாராமல் லாரி மீது மோதியது.
இதில் காரில் இருந்த டாக்டர் பத்மநாபன் பலத்த காயமடைந்து அங்கேயே இறந்தார். டிரைவர் கோவிந்தராஜ்லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்து காஞ்சிபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
Story first published: Tuesday, June 19, 2001, 5:30 [IST]