பள்ளி மாணவி கற்பழித்துக் கொலை: ஒருவர் கைது
ஈரோடு:
சாணம் எடுக்கத் தோட்டத்துப் பக்கம் சென்ற மாணவியை கற்பழித்துக் கொலை செய்ததாக ஒருவரைப் போலீசார்கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம், அரச்சலூர் அருகே உள்ள புள்ளரங்கபாளையம் அரிஜன காலனியைச் சேர்ந்தவர் மாறன்.இவரது மகள் ஜோதிமணி (14). அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர் சம்பவத்தன்று அருகில்இருந்த தோட்டத்திற்குச் சாணம் எடுக்கச் சென்றார்.
அப்போது அங்கு பொன்னுச்சாமி என்பவரது மகன் சுப்ரமணி (31) குளித்துக் கொண்டிருந்தார். இவர் ஒருடீக்கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். தோட்டத்தில் யாரும் இல்லாத சமயம் என்பதால்ஜோதிமணியை வழிமறித்து தூக்கிச் சென்று கற்பழித்துள்ளார்.
இதில் மயங்கி விழுந்த ஜோதிமணியை, கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்து விட்டு தலைமறைவானார்சுப்ரமணி.
இதற்கிடையே ஜோதிமணியைத் தேடிச் சென்ற அவரது தம்பி மற்றும் சித்தப்பா ஆகியோர் ஜோதிமணி இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ந்தனர்.
இது குறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஜோதிமணியின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக சுப்ரமணியைக் கைது செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications