காளிமுத்து சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
சென்னை:
சபாநாயகர் காளிமுத்து மீதான வங்கிப் பண மோசடி வழக்கின் விசாரணை ஜூலை 2-ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டது. அப்போது காளிமுத்து கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் சி.பி.ஐ. கோர்ட்உத்தரவிட்டது.
ராபின்மொயின் என்பவர் 25 ஆண்டுகளுக்கு ன்பு இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் போலியானஆவணங்களைத் தாக்கல் செய்து பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் மீது சி.பி.ஐ. சார்பில் வழக்குத்தொடரப்பட்டது. அந்த வழக்கில், ராபின் மொயினுக்கு ஜாமீன் அளித்ததாக கூறி தற்போதைய சபாநாயகர்காளிமுத்து உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கை நகல்களைநேரில் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று 14 பேருக்கும் கோர்ட் சம்மன் அனுப்பியது. இந்த நிலையில்,காளிமுத்து சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், செவ்வாய்க்கிழமை இந்த வழக்கு விசாரணை சி.பி.ஐ. கோர்ட்டில் வந்தது. அப்போது ஜூலை2-ம் தேதி காளிமுத்து நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அதுவரை விசாரணை ஒத்திவைக்கப்படுவதாகவும்உத்தரவிடப்பட்டது.