இன்றைய தண்ணீர்ப் போராட்டம் .. கோடம்பாக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் குடிநீர் கோரி பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.


சென்னையில் தண்ணீர்ப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் இல்லாமல்பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கியுள்ளனர் பொதுமக்கள்.

நகரில் ஏதாவது ஒரு பகுதியில் தினசரி சாலை மறியல் போராட்டம் நடப்பது அன்றாட காட்சியாகி விட்டது.

செவ்வாய்க்கிழமை கோடம்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் ஏராளமானோர் காலிக் குடங்களுடன் தண்ணீர் கோரிபோராட்டம் நடத்தினர்.

புதுத்தெரு, புலியூர்புரம் பஜனைத் தெரு, பூபதி தெரு ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தண்ணீர் வரவில்லை.இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் காலிக் குடங்களுடன் போக்குவரத்து நெரிசல் மிக்க ஆற்காடுசாலையில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், மாநகராட்சி, மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் விரைந்து வந்துபொதுமக்களை சமாதானப்படுத்தினர். உடனடியாக லாரிகளில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்துமறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சாலை மறியல் போராட்டம் காரணமாக அரைமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+