மணிப்பூர் கலவரத்தில் 14 பேர் பலி: தொடர்ந்து பதட்டம்
இம்பால்:
மணிப்பூரில் திங்கள்கிழமை நடந்த கலவரத்தில் 14 பேர் பலியானார்கள் அங்கு தொடர்ந்து பதட்டம் நிலவிவருகிறது.
கலவரக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர்ப்புகை குண்டு வீசினர். துப்பாக்கி சூடும்நடத்தப்பட்டது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இம்பாலில் காலவரையறையற்ற ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
நாகாலாந்து தேசியவாத சோஷியலிஸ்ட் கவுன்சிலை சேர்ந்தவர்கள் நாகாலாந்தில் தனி நாடு கேட்டு போராட்டம்நடத்தி வருகிறார்கள்.
நாகாலாந்து மாநிலத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள போர் நிறுத்தம் மணிப்பூர் மாநிலத்தில் நாகர்கள் வசிக்கும்பகுதிகளுக்கும் அமல்படுத்தப்பட்டு, அது மேலும் 1 ஆண்டுக்கு நீடிக்கப்பட்டது .
இதற்கு நாகாலாந்து தேசியவாத சோஷயலிஸ்ச் கவுன்சிலை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த 3நாட்களாக பந்த் நடந்து வந்தது. இது திங்கள்கிழமை வன்முறையாக மாறியது.
மணிப்பூர் போலீஸ் உயர்அதிகாரி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
திங்கள்கிழமை நடந்த கலவரத்தின்போது, அவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர்கொல்லப்பட்டனர். 47 பேர் காயமடைந்தனர்.
5,000க்கும் அதிகமான கலவரக்காரர்கள் மண்ணெண்ணெய், தீப்பெட்டிகளுடன் அரசுக்கு எதிராக கோஷம்எழுப்பியபடி சென்று அரசு அலுவலகங்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கட்சிஅலுவலகங்களும் தீ வைத்தனர்.
மத்திய அரசு உடனடியாக பாதுகாப்பு படையினரை அனுப்பியுள்ளனர். செவ்வாய்க்கிழமை நிலைமை கட்டுக்குள்இருக்கிறது. நூற்றுக்கணக்கான புறக்காவல் படையினர் காவலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 600 புறக்காவல்படைவீரர்கள் செவ்வாய்க்கிழமை மணிப்பூர் வருகிறார்கள்.
கலவரக்காரர்கள் தடையை மீறி சட்டசபை, தலைமைச் செயலகம், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள்அலுவலகங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
சபாநாயகர் அலுவலகத்திற்கும் தீ வைக்கபப்பட்டது. இதில் சபாநாயகர் படுகாயமடைந்தர். 5 எம்.எல்.ஏக்களும்காயமடைந்தனர். மணிப்பூர் காங்கிரஸ் கட்சி, மணிப்பூர் மக்கள் கட்சி அலுவலகங்களும் கலவரக்காரர்களால் தீவைத்து கொளுத்தப்பட்டன.
கலவரக்காரர்கள் தலைவர்களின் உருவ பொம்மையையும் எரித்தனர். பின்னர் அவர்கள் கவர்னர் மாளிகையைமுற்றுகையிட்டதையடுத்து அங்கு போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டது.
பாதுகாப்பு அதிகாரிகள்ை செவ்வாயக்கிழமை நிலைமையை ஆராய்ந்து ஊரடங்கு உத்தரவை நீடிப்பதா அல்லதுவிலக்குவதா என்பது குறித்து முடிவெடுப்பார்கள்.
செவ்வாய்க்கிழமை மாலை அமைதிக்குழு கூட்டம் நடத்தப்படவுள்ளது. அப்போது இறந்து போனவர்களின்உறவினர்கள், இறந்து போனவர்களின் உடல்களை பெற்றுச் செல்ல வருகிறார்களா என பார்ப்போம்.
ஆனாலும் இறந்து போனவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே உடல்களை பெற அனுமதிக்கப்படுவார்கள்என்றார். தற்போது கலவரக்காரக்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கலவரக்காரர்களால் தாக்குதலுக்குள்ளான மணிப்பூர் சபாநாயகர் உடல்நிலை கவலைக்குரியதாகவேஉள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.