ஏழைப் பெண்ணுக்கு உதவ ஜெ. உத்தரவு
சென்னை:
சென்னையைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு அரசு வேலைக்கு வாய்ப்புள்ளதா என்று கண்டறிய அதிகாரிக்குஉத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா.
முதல்வரிடம் மனு கொடுப்பதற்காக, தலைமைச் செயலகத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் காத்திருந்தனர். சென்னைவியாசர்பாடியைச் சேர்ந்த சரஸ்வதி என்ற ஏழைப் பெண்ணும், தன்னுடைய குழந்தையுடன் அங்கு காத்திருந்தார்.
தன் அலுவலகத்தில் இருந்து ஜெயலலிதா கீழே வந்தார். அப்போது, பலத்த பாதுகாப்பு வளையத்தையும் மீறி,ஜெயலலிதாவை நெருங்கினார் சரஸ்வதி. உடனே தன்னுடைய குழந்தையை ஜெயலலிதாவின் காலடியில்கிடத்திவிட்டு, பிளஸ் டூ படித்துள்ள தனக்கு அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஜெயலலிதா, குழந்தையை உடனே தூக்குமாறு சரஸ்வதியிடம் கூறினார். பின்னர்,அவருக்கு எந்த வகையிலாவது அரசு வேலை அளிக்க வாய்ப்புள்ளதா என்பதைக் கண்டறியுமாறு, தன்னுடையமுதன்மைச் செயலாளர் கரியாலிக்கு உத்தரவிட்டார்.