For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுவாமிக்கு நான் பயப்படவில்லை .. கீ.வீரமணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதாவை திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி திங்கள்கிழமை தலைமைச்செயலகத்திலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

கி.வீரமணி மீது திங்கள்கிழமை மாலை 5 மணிக்குள் வழக்குத் தொடராவிட்டால் ஜெயலலிதா மீது நடவடிக்கைஎடுக்கக் கோரி வழக்குத் தொடருவேன் என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமிஎச்சரித்துள்ள நிலையில் ஜெயலலிதாவை, வீரமணி சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டு வெளியே வந்த வீரமணி அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம்பேசுகையில், சுப்பிரமணியசுவாமி போன்ற அரசியல் புரோக்கர்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன். அரசியல்தலைவர்களை மதித்துப் பழக்கப்பட்டவன் நான். சுவாமியின் மிரட்டல்களுக்கு நான் பயப்படவில்லை.

மரியாதை நிமித்தமாகவே முதல்வரைச் சந்தித்தேன். விவசாயிகள் வாங்கிய கடனுக்கான வட்டியை ரத்து செய்தஅரசின் முடிவை பாராட்டி ஜெயலலிதாவிடம் வாழ்த்தினேன். புதிய அரசின் செயல்பாடுகளை நான்மகிழ்ச்சியோடு கவனித்துக் கொண்டிருப்பதாக முதல்வரிடம் தெரிவித்தேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X