மீனாட்சி கோவில் யானை இறந்தது
சென்னை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை இறந்தது.
மதுரையிலுள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில், 65 வயதான கோவில் யானை இருந்தது. கடந்த 45வருடங்களாக இந்த யானை கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது.
மீனாட்சி அம்மனின் பெயரே இந்த யானைக்கும் இடப்பட்டிருந்தது. லட்சுமணன் என்ற பாகன், மீனாட்சியைப்பராமரித்து வந்தார்.
கோவில் வைபவங்களின்போது நடத்தப்படும் ஊர்வலங்களில் இந்த யானையே முன்னிலை வகித்து வரும்.சமீபத்தில் மீனாட்சிக்கு பக்கவாதம் ஏற்பட்டது. இதனால் யானையால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதற்குஅளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீனாட்சி இறந்தது. யானை இறந்த தகவல் அறிந்ததும் பக்தர்கள் திரளாகதிரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
யானையின் உடல் கோவிலுக்குச் சொந்தமான செங்குளத்தில் உள்ள பண்ணையில் அடக்கம் செய்யப்படும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications