தேவாரத்துக்கு எதிராக நெடுமாறன் போராட்டம்
சென்னை:
தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப்படைத் தலைவராக முன்னாள் டிஜிபி வால்டர் தேவாரம் நியமிக்கப்பட்டதைஎதிர்த்து, மேட்டூரில் ஜூலை 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பின்தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சந்தனக் கடத்தல் வீரப்பன் தற்போது பொது மன்னிப்புக் கோரிக்கையோடு, சரணடைய முன் வந்துள்ளார். இந்தநேரத்தில், தேடுதல் வேட்டை என்ற பெயரில் அதிரடிப்படைகளை ஏவியிருப்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.
நடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்த தூதுக் குழுவினருக்குத் தமிழக அரசும் கர்நாடக அரசும் அளித்த வாக்குறுதிகளைமுழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று எங்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது.
கடந்த காலத்தில் அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கவேண்டும்.
கொடுமைகள் புரிந்த அதிரடிப்படை அதிகாரிகளை விசாரிக்க விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்றும்எங்கள் கூட்டமைப்பு வலியுறுத்துகிறது என்று நெடுமாறன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.