ஆந்திராவில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்:

ஆந்திர மாநிலம் நலகொண்டா மாவட்டத்தில் உள்ள கம்மனபள்ளியில் போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்தீவிரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பலியானார்.

இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில், கம்மனபள்ளி கிராமத்தில் போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும்இடையே சுமார் 10 மணி நேரம் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 9 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் 3 பேர் பெண்கள்.

துப்பாக்கிச்சூட்டில் பலியான தீவிரவாதிகளின் பெயர், விவரம் எதுவும் தெரியவில்லை. அவர்களை அடையாளம்காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவர்கள் மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

துப்பாச்சூட்டில் பலியான போலீஸ் கான்ஸ்டபிளின் பெயர் பீமுடு என்று அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களில் போலீஸாருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த 2 வது மிகப்பெரிய மோதலாகும்இது. கடந்த ஜூன் 9 ம் தேதி போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆந்திராவில் தீவிரவாதிகள் அடிக்கடி பல ஊர்களில் புகுந்து வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது.

போலீஸ் உளவாளிகள் என்ற சந்தேகத்தில் மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் கடந்தவெள்ளிக்கிழமை அதே அமைப்பைச் சேர்ந்த 12 பேரை சுட்டுக் கொன்றனர்.

இந்த வருடம் மட்டும் மக்கள் போர்ப்படை வீரர்கள் 47 பேரைக் கொலை செய்துள்ளனர். நக்ஸலைட் தீவிரவாதிகள்தாக்குதலில் 150 பேர் உயிரிழந்துள்ளனர் என்றனர்.

முன்னதாக, 1980 ம் ஆண்டு மக்கள் போர்ப்படை குழு உருவாக்கப்பட்டது. பள்ளி ஆசிரியராக இருந்தகொண்டப்பள்ளி சீதாராமய்யா இந்தக் குழுவை அமைத்தார். அதன்பிறகு ஆந்திராவில் பழங்குடி மக்கள் அதிகம்வசிக்கும் பகுதி, ஒரிசா மற்றும் மத்திய பிரதேசத்தில் இவ்வியக்கம் வளர ஆரம்பித்தது.

இவ்வியக்கத்தில் உள்ள தீவிரவாதிகள், மிகப்பெரிய ஜமீன்தார்கள் உள்பட பெரும் பணக்காரர்களைக் குறிவைத்துதாக்குதல் நடத்தி பணிம் பறிக்கும் வேலைகளில் ஈடுபடுவார்கள். அதுமட்டுமின்றி ஜமீன்தார்களின் நிலங்களைஆக்கிரமிக்கும் பணிகளிலும் ஈடுபடுவார்கள்.

கடந்த இருபது ஆண்டுகளாக இந்த மக்கள் போர்ப்படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்தி வந்த தாக்குதலில்இதுவரை 6,000 மக்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+