வி.சி.பொருளாளர் கொலை: மதுரை அருகே பஸ் எரிப்பு
மதுரை:
விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பஸ்ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது.
மதுரை முடக்கத்தான் கிராமத்தை சேர்ந்தவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் பாண்டி.முன்விரோதம் காரணமாக பாண்டி திங்கள் கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் காரணமாக கலவரம் ஏற்படக்கூடும் என கருதி அந்த பகுதியில் போலீஸ் காவல்பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மதுரையிலிருந்து கருவனூர் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்றது.அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அந்த பேருந்து மதுரைக்கு திரும்புவதற்கு முன் கிராமத்தில் சிறிது நேரம்நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது தீடீரென 20 பேர் கொண்ட கும்பல் பேருந்துக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டது.
தகவல் கிடைத்த போலீசாரும். தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புப்படையினரால் தீ அணைக்கப்பட்டது.
போலீசார் விசாரணை நடத்திய போது பேருந்துக்கு தீ வைத்த கும்பல் கருவனூர் கிராமத்தில் ஒளிந்திருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் மந்திக்குளம் கண்மாயில் ஒளிந்திருந்த முத்து, கண்ணன், முருகன், முத்துகிருஷ்ணன்,பாலாறு, செல்வம், பெரியசாமி, மலைச்சாமி, கருப்பையா உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில்தெரிய வந்தது. பாண்டி கொலை செய்ததை கண்டிக்கும் விதமாக பேருந்துக்கு தீ வைத்ததாக அவர்கள்போலீசாரிடம் கூறினர்.
கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறுமதுரை மாவட்ட டி.ஐ.ஜி. மகேந்திரன் உத்தரவிட்டார்.
மதுரையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவுபிறப்பித்து டி.ஐ.ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications