சுடுகாட்டு ஊழல்... சுதாகரன் ஊழல்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சுடுகாடு ஊழலில் இருந்து, சுதாகரனிடம் ஆயிரம் கோடி ரூபாயை பதுக்கி வைக்கச் சொன்னது வரை ஊழல்செய்தவர் ஜெயலலிதா. அவர் சுத்தச் சுயம்பிரகாசம் போல எண்ணி நடிக்கிறார் என்று முன்னாள் முதல்வரும் திமுகதலைவருமான கருணாநிதி கூறினார்.

சென்னையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சுடுகாட்டு ஊழலில் இருந்து, சுதாகரனிடம் ஆயிரம் கோடி ரூபாயைப் பதுக்கி வைக்கச் சொன்னது வரை ஊழல்செய்தவர் ஜெயலலிதா.

அந்தப் பணம் திரும்ப வரவில்லை என்பதற்காக, சுதாகரனைத் தற்போது சிறையில் தள்ளிக்கொடுமைப்படுத்துகிறார்.

ஊழல் ஊழல் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. அவருடைய நடிப்பை நீண்டநாட்களுக்கு இந்த நாடு பார்த்துக் கொண்டிருக்காது.

தனி நீதிமன்றங்களின் ஆயுள்காலம் இம்மாதம் 30ம் தேதியோடு முடிவடைகிறது என்று எந்த வகையிலேகூறுகிறீர்கள்? நான் அதைப் பற்றிய விவரத்தைச் சொல்ல விரும்பவில்லை.

ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்குகளில் திமுக தன்னையும வாதியாகஇணைத்துக் கொள்வதைப் பற்றி யோசித்து வருகிறோம் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+