அதிரடிப்படைக்கு கேரளா உதவி

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்:

வீரப்பனைப் பிடிக்க முயற்சித்து வரும் தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப்படைக்கு கேரள போலீசாரும் உதவிவருகின்றனர்.

வீரப்பன் விவகாரம் குறித்து கேரளத்துடன் தமிழக அரசு தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இத்தகவலை கேரள முதல்வர் அந்தோணி நிருபர்களிடம் புதன்கிழமை தெரிவித்தார். அவர் கூறுகையில், இருஅரசுகளும் இவ்விஷயத்தில் தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றன. நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதைவெளியில் கூற முடியாது என்றார்.

கேரளக் காட்டுப் பகுதியில் வீரப்பன்:

இதற்கிடையே வீரப்பன் கேரள காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளதையடுத்து தமிழகஅதிரடிப்படையின் ஒரு பிரிவு கேரள காட்டுக்குள் புகுந்துள்ளது.

கடந்த ஜெயலலிதா ஆட்சியிலும் கருணாநிதி ஆட்சியிலும் தமிழகமும் கர்நாடகமும் மட்டுமே வீரப்பனைத் தேடும்பணியில் தீவிரம் காட்டின. ஆனால், இம்முறை ஆட்சியைப் பிடித்துள்ள ஜெயலலிதா, கேரள அரசுடனும் தொடர்ந்துதொடர்பு கொண்டு வருகிறார். கேரள போலீசாரும் இந்த வீரப்பன் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை வீரப்பன் சுமார் 2,000 யானைகளைக் கொன்று குவித்துள்ளான். ராஜ்குமார் உள்படநூற்றுக்கணக்கானவர்களைக் கடத்தியுள்ளான். இதில் பலரைக் கொன்று குவித்துள்ளான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+