மெட்ரிக் தேர்வில் முத்திரை பதித்த கண்மணிகள்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டத்தில் மெட்ரிகுலேசன் தேர்வில் 97 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
கோவை, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய நகரங்களில் மெட்ரிகுலேசன் தேர்வில் 7ஆயிரத்து 726 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 7 ஆயிரத்து 502 பேர்தேர்ச்சி பெற்றனர்.
மேலும், மாவட்ட அளவில், விமல்குமார் என்ற மாணவர் 1100 மதிப்பெண்களுக்கு1042 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றார்.
இவர் கோவை பெர்க்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர். அவிலா காண்வென்ட்மாணவி லாவண்யா 1041 மதிப்பெண்கள் பெற்று மாவட்டத்தில் இரண்டாம் இடத்தைபெற்றுள்ளார். எஸ்.பி.ஓ.ஏ மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த மாணவி தீபாமாதுரி1040 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தைப் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications