கற்பனை கதாபாத்திரமான குரங்குமனிதன்
டெல்லி:
டெல்லி போலீசார் குரங்குமனிதன் என யாருமே இல்லை என செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.
கடந்தமாதம் டெல்லியில் குரங்கு மனிதன் மக்களை தாக்கி காயப் படுத்தப்படுவதாக வந்த தகவல்களையடுத்துபோலீசார் குரங்குமனிதனை தேடி வந்தனர்.
கிழக்கு டெல்லியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் குரங்குமனிதன் இரவில் மேல் மாடியில் படுத்திருக்கும் மக்களைதாக்கி காயப்படுத்துவதாகவும், நகத்தால் கீறி காயப்படுத்துவதாகவும் மக்கள் கூறி வந்தனர்.
குரங்கு மனிதனை யாரும் பார்த்ததாக கூறவில்லை. இருந்தாலும் குரங்கு மனிதனை பார்த்ததாக கூறிய சிலர் குரங்குமனிதனின் மார்பு பகுதியிலிருந்து ஒளி வந்தது. அவன் கூரை விட்டு கூரை தாவி செல்கிறான். வந்தது போலவேவேகமாமவே மறைந்து விட்டான் என்று கூறி வந்தனர்.
குரங்கு மனிதன் பயத்தில் 1 கர்ப்பிணி பெண் உட்பட 3 பேர் இறந்து போனார்கள். 74 பேர் குரங்குமனிதனால்தாக்கப்பட்டதாக கூறி காயங்களுடன் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குரங்கு மனிதன் தாக்குதல் நடத்துவதாக கூறப்பட்ட பகுதியில் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டது குரங்குமனிதன் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ 50.000 பரிசு வழங்கப்படும் எனவும் போலீசார் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குரங்கு மனிதன் என யாருமே இல்லை என போலீசார் கூறியுள்ளனர். போலீசார்தடய அறிவியல் வல்லுனர்கள் மற்றும் மன நல மருத்துவர்கள் மூலம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்குரங்குமனிதன் என்பது மக்களின் கற்பனையில் உருவான கற்பனை பாத்திரம்தான் என கூறுகின்றனர்.
இது குறித்து டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் சுரேஷ் ராய் கூறுகையில் குரங்கு மனிதன் என்று யாரும்கிடையாது.
குரங்கு மனிதன் குறித்த பீதியை பரப்பிவிட்டது பத்திரிக்கைகள்தான். குரங்கு மனிதன் என யாரும் கிடையாது. இதுமக்களின் கற்பனைதான்.
குரங்கு மனிதனால் 74 பேர் காயமடைந்ததாக கூறின. ஆனால் அவை எல்லாம் குரங்கு மனிதனால் ஏற்பட்டகாயமே அல்ல.
குரங்கு மனிதன் பற்றிய விஷயத்தை பத்திரிக்கைகளும் பெரிதுபடுத்திவிட்டன. இந்த விஷயத்திற்கு அதிகமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விட்டது.
குரங்குமனிதன் தாக்குவதாக கூறப்பட்ட பகுதிகளில் போலீஸ் காவல் போட்டப்பட்டதும் மக்கள் மேலும் பயந்துபோனார்கள்.
முதலில் குரங்குமனிதன் தாக்குதல் பாகிஸ்தானியரின் வேலை என கூறி வந்தனர். அதை நாங்கள் முற்றிலும்மறுத்தோம். மேலும் சிலர் குரங்கு மனிதன் முஸ்லிம்களை மட்டுமே தாக்குவதாக கூறி இந்த விஷயத்திற்கு மத சாயம்பூச முனைந்தனர்.
மேலும் சிலர் இதில் ஒரு கும்பலே ஈடுபட்டுவருவதாக கூறி வந்தனர். ஆனால் இது எதுவுமே உண்மை இல்லைஎன்றார்.
டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் குமார் கூறுகையில் . இதில் போலீசாரின் நேரம்வீணடிக்கப்பட்டது என்றாலும், மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டியது எங்கள் கடமை இன்னமும்குரங்குமனிதன் தாக்கப்பட்டதாக கூறப்பட்டதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்கள் என தெரியவில்லை என்றார்.
ஆனாலும் பல மக்கள் போலீசை குறை கூறுகின்றனர். போலீசார் மக்களின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் விதமாக,கற்பனையை அதிகரிக்கும் விதமாக நடந்து கொண்டனர் என கூறுகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications