பெண் போலீஸ்-டி.எஸ்.பி அடிதடி
கோவைபுதூர்:
கோவை மாவட்டம் கோவைபுதூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசுக்கும், டி.எஸ்.பிக்கும் இடையேஏற்பட்ட தகராறில் இருவருக்குமிடையே அடிதடி நடந்தது.
இதையடுத்து பெண் போலீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவை அருகே உள்ள கோவைபுதூரில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை இருக்கிறது. இதில் பெண் போலீஸ்மாதேஸ்வரி, பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது டி.எஸ்.பி ரேங்க்கில் உள்ள உதவி காமாண்டட் போலீஸ் அதிகாரி ஒருவர், சரியாக பயிற்சியில்ஈடுபடவில்லை என திட்டினாராம். இதனால், மாதேஸ்வரிக்கும் அந்த அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம்ஏற்பட்டுள்ளது. அதிகாரி மாதேஸ்வரியை அடித்துள்ளார்.
இதையடுத்து மாதேஸ்வரி, அந்த அதிகாரியை தடியால் திருப்பித் தாக்கியுள்ளார். இதையடுத்து மாதேஸ்வரிக்குமனநிலை பாதிப்படைந்ததாகக் கூறி அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அப்படிச் சம்பவம் நடக்கவில்லை எனமறுப்புத் தெரிவித்தார். மேலும் மதோஸ்வரிக்கு மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்தார்.