சாலை விபத்தில் 2 இலங்கை அகதிகள் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் நடந்த சாலை விபத்தில் 2 இலங்கை அகதிகள் காயமடைந்தனர்.
இலங்கையில் உள்ள தமிழ் விடுதலை அமைப்பான டெலோ அமைப்பின் தலைவர் பத்மநாபாவின் நினைவு நாள்செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதே நாளில்தான் அவர் சென்னையில் வைத்துக் கொலைசெய்யப்பட்டார். அவரது நினைவுச் சின்னம் கிருஷ்ணாம்பேட்டை அம்பேத்கர் பாலம் அருகில் உள்ளது.
இதையொட்டி சென்னை அருகே புழல் பகுதியில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த சுமார் 50 அகதிகள்ஆட்டோ, மற்றும் வேன்களில் அம்பேத்கர் பாலத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த போய்க் கொண்டிருந்தனர்.
போர் நினைவுச் சின்னம் அருகே வந்தபோது எதிரே வந்த அரசு பஸ் மோதியது. இதில் பாபு, சிவரூபன் ஆகிய இருஇலங்கை அகதிகளும் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications