இலங்கை: நீதிமன்றம் Vs

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

சுப்ரீம் கோர்ட் உத்தரவை எதிர்த்து செயல்படப்போவதாகவும், ஆளுங்கட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வரப்போவதாகவும் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகரும், அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் சகோதரருமான அனுரா பண்டாரநாயகா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்ற விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் உள்பட யாருக்கும் தலையிடும்அதிகாரம் கிடையாது. நாடாளுமன்ற செயல்பாடுகளுக்கு யாரும் கட்டுப்பாடுகளோ, வரைமுறைகளோ விதிக்கமுடியாது.

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தது தொடர்பாகவும், பல குற்றச்சாட்டுக்களுக்கு ஆளானதுதொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சரத் சில்வாவை விசாரிக்க விசாரணைக் கமிட்டி அமைக்கப்படும்என்று கூறினார்.

சபாநாயகரின் இந்தப் பேச்சை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கேவும் பாராட்டியுள்ளனர்.

முன்னதாக, இலங்கையில் சந்திரிகா அரசுக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சரத் சில்வா செயல்பட்டுவருவதாகவும், அவர் மேல் பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளதாகவும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிகுற்றம்சாட்டி வந்தது.

மேலும் இதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் சந்திரிகா அரசுக்கு எதிராக இந்த வார இறுதியில் நம்பிக்கையில்லாத்தீர்மானம் கொண்டு வரவுள்ளதாகவும் ஐக்கிய தேசிய கட்சி அறிவித்திருந்தது.

கடந்த 6 ம் தேதி ஐக்கிய தேசிய கட்சி இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி, நாடளுமன்றத்தில் கேள்வி எழுப்பியது.தலைமை நீதிபதி மேல் கூறப்பட்டுள்ள புகார் குறித்து கமிட்டி ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்என்றும் கோரியது.

ஆனால், அதே நாளில் தலைமை நீதிபதி மேல் எழுப்பப்பட்டுள்ள பல குற்றச்சாட்டுக்கள் குறித்துவிசாரணைக்கமிட்டி அமைக்கக் கூடாது என நாடாளுமன்ற சபாநாயகருக்கு (அனுரா பண்டாரநாயக்காவுக்கு) 3பேர் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நேரத்தில் நாடாளுமன்ற சபாநாயகரான அனுரா பண்டாரநாயகா, சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவைஆதரிப்பதா அல்லது ஐக்கிய தேசிய கட்சியின் நம்பிக்கையில்லாத தீர்மானத்தை ஆதரிப்பதா என்றகேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இந்நிலையில் சந்திரிகா குமாரதுங்காவும், அனுரா பண்டாரநாயகாவும் கடந்த ஜூன் 10 ம் தேதி சந்தித்துப் பேசினர்என்று பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்தார். தனது சகோதரரான அனுராபண்டாரநாயகாவை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயல்கிறார் சந்திரிகா என்ற குற்றச்சாட்டையும்மறுத்தார்.

இதற்கிடையே, தலைமை நீதிபதி சரத் சில்வாவை விசாரிக்க கமிட்டி அமைக்க சுப்ரீம் கோர்ட் சபாநாயகருக்குத்தடை விதித்ததையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியும், ஜனதா விமுக்தி பெருமூனா கட்சியும் சேர்ந்துநம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாக அறிவித்தது.

எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் கூறுகையில், சுப்ரீம்கோர்ட் நாடாளுமன்றவிதிமுறைகளுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள தலைமை நீதிபதியைவிசாரிக்க கமிட்டி அமைக்க சுப்ரீம்கோர்ட் சபாநாயகருக்கு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை சபாநாயகர்அனுரா பண்டாரநாயகா நிராகரிக்க வேண்டும்.

இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 3 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்ககோருவோம். சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் நாடாளுமன்ற விதிமுறைகளையும், மரபுகளையும் மீறுகிறார்கள் என்றுகுற்றம்சாட்டினார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+