தண்ணீர்.. தண்ணீர்..தண்ணீர்
ஈரோடு:
ஈரோட்டிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் புதன்கிழமை முதல் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தினம் 12.5லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் செல்லும்.
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்தைப் போக்க ஈரோட்டிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்லதிட்டமிடப்பட்டுள்ளது. இந்த குடிநீர் ஈரோட்டிலிருந்து செல்லவிருக்கிறது. இதற்காக ஈரோடு நீரேற்று நிலையம்ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நீரேற்று நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தினம் 50 வேகன்களில் செல்கிறது.
முதல் கட்டமாக புதன்கிழமை முதல் இந்த குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இங்கிருந்து கொண்டு செல்லப்படும்ஒவ்வொரு லிட்டர் குடிநீருக்கு 22 பைசா செலவாகிறது.
ரயில் மூலம் கொண்டு செல்ல ஆகும் செலவிற்காக ரயில்வேயிற்கு மாநில அரசு முதல் கட்டமாக ரூ 13. 5 லட்சம்முன்பணமாகச் செலுத்தியுள்ளது.
ஈரோடு நீரேற்று நிலையத்தில் எப்போதும் தயார் நிலையில், 30 வேகன்களில் தண்ணீர் இருக்கும். இந்த வேகனோடு,20 வேகன்களில், தண்ணீர் நிரப்பப்பட்டவுடன் ரயில் புறப்பட்டுச் செல்லும். இங்கிருந்து செல்லும் குடிநீர்வேகன்களில் ஈரோடு-நெல்லிவாக்கம் குடிநீர் என எழுதப்பட்டிருக்கும்.
தினம் இந்த குடிநீர் திட்டம் மூலம் சென்னைக்கு 12. 5 லட்சம் லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படும்.












Click it and Unblock the Notifications