அரசியல் சட்டத்தில் 40 எழுத்துப் பிழைகள்!
டெல்லி:
அரசியல் சட்ட மசோதா ஒன்றில் 40 எழுத்துப்பிழைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ரசாயன ஆயுதங்கள் தொடர்பான ஒப்பந்த சட்டம் 2000 தொடர்பான மசோதா கடந்த வருடம் நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்யப்பட்டது.
அழிவை ஏற்படுத்தும் ரசாயன ஆயுதங்களை தயாரிப்பதற்கும், அவற்றை பாதுகாத்து வைப்பதற்கும் இந்தச் சட்டம்தடை விதிக்கிறது. இந்த மசோதா சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது.
இந்த மசோதாவைப் படித்துப் பார்த்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் கடந்த ஆகஸ்ட் 26 ம் தேதி இந்தமசோதாவில் ஒப்புதல் கையெழுத்துப் போட்டார்.
மசோதாவுக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் மத்திய அரசு கெசட்டில் கடந்த வருடம் ஆகஸ்ட் 28 ம் தேதிவெளியிடப்பட்டது.
எழுத்துப்பிழைகள் கண்டுபிடிப்பு:
இப்போது அந்த சட்டத்தைப் படித்துப் பார்த்த போது அதில் ஏராளமான எழுத்துப் பிழைகள் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சட்டத்தில் 40 எழுத்துப் பிழைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் 125 வது பக்கத்தில்person என்று இருக்க வேண்டிய இடத்தில் perones என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதே பக்கத்தில் மேலும் இரண்டு எழுத்துப் பிழைகள் உள்ளன. அதே போல் 92 வது பக்கம் தொடங்கி பலபக்கங்களில் எழுத்துப் பிழைகள் உள்ளன.
இந்திய அரசியல் சட்ட விதிமுறைப்படி, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களில், கமாமுதல் முற்றுப்புள்ளி வரை தவறுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
ஆனால் ரசாயன ஆயுதங்கள் தொடர்பான இந்த சட்டத்தில் இவ்வளவு பிழைகள் இருப்பது ஆச்சர்யத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதலும் அளித்து விட்டதால் இதைத் திருத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப்பிழைகள் அரசுக்கு மட்டுமின்றி நாடளுமன்ற உறுப்பினர்களுக்கும் தர்மசங்கடமான சூழ்நிலையைஏற்படுத்தியுள்ளது.
இந்த எழுத்துப் பிழைகளைத் திருத்த வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்துக்கு திருத்த சட்டம் ஒருதிருத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications