For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஜித்தை பார்க்க வீட்டை விட்டு ஓடிய மாணவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

திரைப்பட நடிகர் அஜித்தைப் பார்ப்பதற்காக வீட்டை விட்டு ஓடி வந்த 3 பள்ளி மாணவர்களைக் காவல் துறையினர்மீட்டனர்.

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மகன் வெற்றிச் செல்வம் (15). இவர் தனது பள்ளிநண்பர்கள் பாலகிருஷ்ணன் (13), மாரிமுத்து (13), ஆகியோருடன் ரமேஸ்வரம் எக்ஸ்பிரசில் கோவை வந்தார்.

இவர்கள் கோவையில் அஜித் தங்கியிருப்பதாக எண்ணி அவரைப் பார்க்க வந்தனர். ஆனால், கோவையில்அஜித்தைக் காண வழி தெரியாமல், ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தனர். சந்தேகத்திற்கு இடம்அளிக்கும் வகையில் நின்றிருந்த அவர்களை ரயில்வே போலீசார் விசாரணை செய்தனர்.

அப்போது அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சென்னை செல்லவும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. எனவே 3சிறுவர்களைப் பற்றியும் அவர்களது பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்களதுபெற்றோர்கள் கோவை வந்து 3 பேரையும் அழைத்துச் சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X