அசாமில் சரணடைந்த 14 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
கவுஹாத்தி:
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் போலீஸாரிடம் சரணடைந்த 14 தீவிரவாதிகளை, உல்பாதீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் 5 தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து அசாம் மாநில காவல்துறை அமைச்சர் பிரதியுத் போர்டோலி கூறுகையில், அசாமில் உல்பாதீவிரவாதிகள் பலர் சமீபத்தில் போலீசில் சரணடைந்தனர்.
சரணடைந்த தீவிரவாதிகளில் 14 பேரை மோரான் பகுதியிலுள்ள மோரான் போலோ கிளப்பில் பிற தீவிரவாதிகள்சுட்டுக் கொன்றனர்.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை நள்ளிரவு சுமார் 12.30 மணிக்கு நடந்தது. பயங்கர ஆயுதங்களுடன் இரண்டுகார்களில் வந்திறங்கிய தீவிரவாதிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் சரணடைந்த 14 தீவிரவாதிகளைச் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்தில் மேலும் 5 தீவிரவாதிகள் படுகாயமடைந்தனர்.
தீவிரவாதிகள் தங்களது தாக்குதலை நடத்தி விட்டு அப்பகுதியிலிருந்து வெளியேறி விட்டனர். இதையடுத்துதாக்குதல் நடந்த இடத்தில் போலீஸ், ராணுவம் மற்றும் புறக்காவல் படை வீரர்கள் தீவிரவாதிகளைத் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய சாலைப்பகுதிகளில் போலீஸார் ரோந்துப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும் சரணடைந்த பிற தீவிரவாதிகள், தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய அரசிடம் உதவிகோரியுள்ளனர் என்றார்.
சரணடைந்த தீவிரவாதிகளை கொல்லும் உல்பா தீவிரவாதிகளின் செயல்கள் மிகவும் கீழ்த்தரமானவை என்றும்கண்டிக்கத்தக்கவை என்றும் சரணடைந்த தீவிரவாதி சுனில் நாத் கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களில் சரணடைந்த தீவிரவாதிகளில் 50 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை உல்பாதீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.
கடந்த 5 வருடங்களில் 5,000 க்கும் அதிகமான உல்பா தீவிரவாதிகள் சரணடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில்10, 000 பேர் உல்பா தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியாகியுள்ளனர்.
1979 ம் ஆண்டு உல்பா தீவிரவாதிகளின் அமைப்பு உருவாக்கப்பட்டது. உல்பா தீவிரவாதிகள் அசாமில் தனிமாநிலம் கேட்டு போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications