அமாவாசை நாளில்...
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் நடமாடும் அமாவாசை நாளில் கடத்தல் வேட்டையை அதிரடிப்படையினர்துவக்கியுள்ளனர்.
வீரப்பன் அமாவாசை நாளில் தான் தனது கடத்தல் நாடகங்களை இதுவரை அரங்கேற்றி வந்துள்ளார். அதே போலஅவனைத் தேடும் வேட்டையில் அமாவாசை நாளைத் தேர்வு செய்து நல்ல நேரம் பார்த்து தேடுதல் வேட்டைதுவங்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கே தேடுதல் வேட்டைக்கு விஜயகுமார் தயாராகி விட்டார். புதன் கிழமைஇரவே அதிரடிப்படையினர் அரசுக்குச் சொந்தமான பல இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் காலையில்இவர்கள் தங்களது வேட்டையைத் துவக்கினர்.
அதிரடிப்படையினருக்குத் தேவையான குடிநீர், ரொட்டி, பழ வகைள் அனைத்தும் ஒரு வேனில் கொண்டுசெல்லப்பட்டது. மேலும், அதிரடிப்படை போலீசார் லுங்கி, தலைப்பாகையுடன் காட்டு வாசி வேடத்திலும்செல்லுகின்றனர். இவர்கள் உளவு பார்த்து அவ்வப்போது தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications