முஷாரப்புக்கு நாராயணன் வாழ்த்து
டெல்லி:
ஜூலை மாதம் பாகிஸ்தான் அதிபர் பெர்வீஸ் முஷாரப் இந்தியாவுக்கு வருகை தருவதால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும்இடையே உள்ள உறவு மேம்படும் என்று இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபராக முஷாரப் பதவியேற்றுக் கொண்டதற்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் தெரிவித்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:
இந்தியா எப்போதும் பாகிஸ்தானுடன் நட்புறவையும், அமைதியையும் கடைபிடிக்கவே விரும்புகிறது. இதற்கு பாகிஸ்தான்ஒத்துழைப்பு நல்க வேண்டும்.
பாகிஸ்தான் அதிபராக முஷாரப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்த மாதம் அதிபர் முஷாரப் இந்தியா வருவதால், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நல்லுறவு ஏற்படும். இதில்எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்.
முன்னதாக, முஷாரப் கடந்த புதன்கிழமை பாகிஸ்தான் அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். இவர் மூன்று நாட்கள்சுற்றுப்பயணமாக ஜூலை 14 ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா வரும் முஷாரப் 16 ம் தேதி வரை இங்கு தங்கியிருப்பார்.ஜூலை 15 ம் தேதி பிரதமர் வாஜ்பாயுடன் ஆக்ராவில் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஜூலை 14 ம் தேதி டெல்லி வரும் முஷாரப்புக்கு ராஷ்டிரபதி பவனில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. 14 ம்தேதி முழுவதும் முஷாரப் ராஷ்டிரபதி பவனிலேயே தங்குவார். அடுத்த நாள் காலை ஆக்ரா செல்லும் முஷாரப் பிரதமர் வாஜ்பாயைசந்தித்துப் பேசுவார். முஷாரப் அஜ்மீரில் பல இடங்களைச் சுற்றிப் பார்க்கிறார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications