எதிர்க்கட்சி தலைவருக்கு சந்திரிகா அழைப்பு
கொழும்பு:
இலங்கையில் ஆளும் கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டு வந்ததையடுத்து அங்கு தேசிய அரசு அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு அதிபர் சந்திரிகா அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையில் 18 வருடங்களாகத் தொடர்ந்து நடந்து வரும் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும்வகையில் தேசிய அரசு அமைக்க வேண்டும் என்று சமீபத்தில் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே மற்றும் அமைச்சர்திசநாயகே ஆகியோர் வலியுறுத்தினர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், சந்திரிகாவும், எதிர்க்கட்சித்தலைவர் ரனில் விக்ரமசிங்கேவும் தேசிய அரசு அமைப்பது குறித்து விவாதம் நடத்துவார்கள் என்று அரசியல்பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இலங்கை இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நார்வேதூதுக்குழுவினரின் செயல்பாடுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்றும் தெரிகிறது எனஅரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆளும் கட்சியை எதிர்த்து நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதாலோ அல்லது தேசிய அரசுஅமைப்பதாலோ இனப்பிரச்சனையை அவ்வளவு எளிதாக முடிவுக்குக் கொண்டு வந்து விட முடியாது என்றும்அவர்கள் தெரிவிக்கின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications