புழுத்த அரிசி இல்லை: தேனியில் அதிகாரிகள் ஏமாற்றம்

Subscribe to Oneindia Tamil

தேனி:

தேனி மாவட்டத்திலிருக்கும் 5 சிவில் சப்ளை கிடங்குகளில் புழுத்துப்போன அரிசி இல்லாத காரணத்தால் சோதனையிட வந்தஅதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

சென்ற சம்பா பருவத்தில் விவசாயிகளிடமிருந்து 4,000 டன் அரிசி கொள்முதல் செய்யப்பட்டது.

மதுரை சிவில் சப்ளை கிடங்கிற்கு இந்த நெல் அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தேனி மாவட்டத்திலிருக்கும் ரேஷன்கடைகளுக்கு மாதம் 3,520 டன் அரிசி தேவைப்படுகிறது. சத்துணவு மையங்களுக்கு 350 டன் அரிசி தேவைப்படுகிறது.

மாவட்டத்திலிருக்கும் 5 சிவில் சப்ளை கிடங்குகளில் அதிகபட்சமாக 12,000 டன் அரிசி மட்டுமே ஸ்டாக் வைக்க முடியும்.இதனால் ஒவ்வொரு மாதமும் மதுரை மற்றும் திண்டுக்கல்லிலிருக்கும் உணவுக் கழகத்திலிருந்துதான் தேனி மாவட்டத்திற்குதேவைப்படும் அரிசி வரவழைக்கப்படும்.

அந்த அரிசி ரேஷன் கடைகளுக்கும், சத்துணவு மையங்களுக்கும சப்ளை செய்யப்படும்.

இந்நிலையில், முந்தைய தி.மு.க. ஆட்சியின்போது ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக வாங்கி வைக்கப்பட்டிருந்த அரிசிபுழுத்துப்போன அரிசி என அதிமுக குற்றம் சாட்டியது. இது தொடர்பாக தி.மு.க. அரசின் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்திலிருக்கும் அனைத்து சிவில் சப்ளை கிடங்குகளிலிருக்கும் அரிசியைப் பரிசோதனை செய்யஉத்தரவிடப்பட்டது.

இதன்படி, தேனி சிவில் சப்ளை கிடங்குகளில் ஸ்டாக் வைக்கப்பட்டிருந்த அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள், உணவுகடத்தல் தடுப்பு பிரிவு, லஞ்ச ஒழிப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் குழு சோதனையிட்டது.

இந்த சோதனையில் இருப்பில் இருந்த அரிசி புழுத்த அரிசி இல்லை. தரமான அரிசிதான் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து,அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+