உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ 4 லட்சம் நிவாரணம்
கோழிக்கோடு:
கோழிக்கோடு கடலுண்டி ஆற்றில் ரயில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ 4லட்சம் நிவாரண உதவி அளிக்கப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர் திக் விஜய் சிங் தெரிவித்தார்.
ரயில் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட ரயில்வே இணை அமைச்சர் திக் விஜய் சிங் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமாக இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. கடலுண்டிஆற்றுப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டதால் இந்த ரயில் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.
விபத்து நடந்த போது கடும் மழை பெய்துள்ளது. அங்கு தொடர் மழை பெய்வதால் மீட்புப்பணிகளில் பின்னடைவுஏற்பட்டுள்ளது.
மீட்புப்பணியில் கடற்படை, போலீஸ், நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் தீயணைப்புப் படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர்.ஹெலிகாப்டர் மூலமும் மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ரயில் ஆற்றில் கவிழ்ந்ததில் பல பயணிகள் ஆற்றில் உள்ள வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்கும்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. விபத்து நடப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பு ரயில்பலமுறை குலுங்கியது என்றும் தெரிய வந்துள்ளது.
பல ஆண்டு பழமையான இந்த கடலுண்டி ஆற்றுப்பாலம் பிரிட்டிஷார் காலத்தில் கட்டப்பட்டதாகும். இதில்உடைப்பு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதா என்பதை முதற்கட்ட விசாரணைக்குப்பிறகுதான் தெரிவிக்கமுடியும் என்றார்.