இலங்கை அரசியல் சிக்கல்: நார்வே முயற்சிக்கு பாதிப்பில்லை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் அதிபர் சந்திரிகா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோதிலும், நார்வே தூதுக் குழுவின் சமரச முயற்சியில் எவ்வித இடையூரும் ஏற்படாது என்று ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும்அறித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரனில் விக்ரமசிங்கே கூறுகையில், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்நிறைவேற்றப்பட்ட போதும், நார்வே தூதுக்குழுவினரின் அமைதி முயற்சிக்கு நாங்கள் ஒரு போதும் தடை விதிக்க மாட்டோம். அவர்களின்அமைதி முயற்சிக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றார்.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த நேரத்தில் ரனில் விக்ரமசிங்கேவும், அதிபர்சந்திரிகா குமாரதுங்காவும் சந்தித்துப் பேசினர்.

இவர்கள் சுமார் ஒரு மணி நேரம் நடத்திய பேச்வார்த்தையில் நார்வே தூதுக்குழுவின் முயற்சிக்கு அனைத்து ஒத்துழைப்பும் கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர்.

ஆளும் கட்சியான மக்கள் கூட்டணியில் இடம்பெற்றிருந்த இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றதையடுத்து,மக்கள் கூட்டணி நாடாளுமன்றத்தில் தனது மெஜாரிட்டியை இழந்தது.

முன்னதாக, ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சியால் இலங்கை இனப்பிரச்சனையை தீர்த்து வைக்கமுடியவில்லை என்ற காரணத்தால்தான்எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழர் கட்சிகளும் சேர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தன.

நாடாளுமன்றத்தில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு (டெலோ) 5 இடங்கள் உள்ளன. டெலோ அமைப்பும் நம்பிக்கையில்லாதீர்மானத்துக்கு ஆதரவளித்தன என்பது நினைவிருக்கலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+