புதுப் பாலம் தயாராகும் போதே நடந்த விபத்து
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:
60 பேரைப் பலிகொண்ட ரயில் விபத்து நடந்த பாலத்தின் அருகே புதிய பாலம் ஒன்று அமைக்கும் பணி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
விபத்து நடந்த பாலம் அமைக்கப்பட்டு சுமார் 120 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆங்கில ஆட்சிக் காலத்தில்கட்டப்பட்ட இந்த இரும்புப் பாலத்தைச் சுமந்து கொண்டிருந்த ஒரு தூண் மணலில் புதைந்ததால், பாலம் உடைந்துவிட்டது. இதனால்தான் இப்பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
உடைந்த பாலத்தைச் சீரமைக்க இன்னும் 3 மாதங்களாவது ஆகும் என்று ரயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.
இந்தப் பாலத்தின் அருகே, புதிய பாலம் ஒன்று கட்டும் பணி ஏற்கனவே நடந்து வருகிறது. இடிந்த பாலத்தின்காரணமாக, புதிய பாலமும் சிறிதளவு சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications