ஆதி திராவிட ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வேண்டும்
திருவள்ளூர்:
தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையால் நடத்தப்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றத்திற்காக கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என என தமிழ்நாடு ஆதிதிராவிட நலப்பள்ளி,தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர் சங்க தலைவர் சம்பத் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் துவக்கப்பளளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் சந்தித்து வரும் பிரச்சகைைளைநீக்குவதற்காக கவுன்சிலிங் முறையை தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ளார்
இது தவிர மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களுக்கு அவர்கள் கேட்ட இடத்திற்கு மாற்றம் தருவதுகுறித்தும் மாநில அரசு கவுன்சிலிங் நடத்தி வருகிறது.
அரசின் ஆதிதிராவிட நலத்துறையால் நடத்தப்பட்டு வரும் துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளிஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
ஆதிதிராவிட நலத்துறை ஹாஸ்டலில் பணிபுரியும் வார்டன்களுக்கும் அவர்கள் கேட்கும் இடத்திற்கு மாற்றம்கிடைக்கும் வகையில் கவுன்சிலிங் முறை அமல் படுத்தப்பட்டால் அவர்களும் பயன் பெறுவார்கள் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications