For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை: குடிநீர் செலவைக் குறைக்க புதிய யோசனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நெய்வேலி, ஈரோட்டிலிருந்து தண்ணீரைக் கொண்டுவர ஆகும் செலவில் பாதியைக் கொடுத்தால் போதும்,சென்னையில் குறைபாடு இல்லாமல் குடிநீரை விநியோகிக்கத் தயார் என்று சென்னை குடிநீர் டாங்கர் லாரிஉரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

இச்சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் நிலவும் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கும் விதமாக, நெய்வேலியிலிருந்தும்,ஈரோட்டிலிருந்தும் தண்ணீரை லாரிகள் மூலம் கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்தது தமிழக அரசு.

கடந்த வார ஆரம்பத்தில் நெய்வேலியிலிருந்து லாரிகள் மூலமும், வார இறுதியில் ஈரோட்டிலிருந்து ரயில் மூலமும்சென்னைக்கு குடிநீர் வர ஆரம்பித்தது.

இந்த 2 இடங்களிலும் இருந்து சென்னைக்கு வரும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை குடிநீர் டாங்கர் உரிமையாளர்கள் சங்கம் நிறைவேற்றியுள்ள தீர்மானம் வருமாறு:

நாங்கள் நேரடியாகவே சுத்தமான தண்ணீரைத்தான் மக்களுக்கு வழங்கி வருகிறோம். மேலும்,நெய்வேலியிலிருந்து குடி நீரைக் கொண்டுவர அதிக நேரமாகும், நிறைய நீர் வரும் வழியில் வீணாகப் போகும்.

நெய்வேலி-சென்னைக்கு இடையே இந்த லாரிகள் தினமும் 500 டிரிப்புகள் அடிக்கின்றன. ஆனால் எங்களால்1,000 டிரிப்புகள் வரைகூட இயக்க முடியும்.

எனவே, இந்த நெய்வேலி-சென்னை குடிநீர் லாரிகளின் ஒப்பந்தக் கட்டணத்தில் பாதி கொடுத்தால் போதும்.எந்தவிதக் குறைபாடும் இன்றி நாங்கள் குடிநீரை மக்களுக்கு அளித்து விடுவோம். இதனால் அரசுக்கும் செலவுமிச்சமாகும்.

மேலும், அருகிலுள்ள கிராமங்களிலிருந்து தண்ணீரை எடுக்க உரிமம் தர வேண்டும்.போக்குவரத்து-வருவாய்-காவல் துறை அதிகாரிகளின் தொந்தரவும் எங்களுக்கு இருக்கக் கூடாது ஆகியதீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X