வீரப்பனிடம் தூது செல்ல ஆசைப்பட்ட கொளத்தூர் மணி கைது
மேட்டூர்:
தந்தை பெரியார் திராவிடக் கழக தலைவர் கொளத்தூர் மணியை க்யூ பிராஞ்ச் போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
தந்தை பெரியார் திராவிடக் கழகத் தலைவராக இருந்தவர் கொளத்தூர் மணி. இவர் திராவிடக் கழகத் தலைவர் வீரமணியின்தலைமையில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
சமீபத்தில் கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றார். அப்போது நடிகர் ராஜ்குமாரை மீட்க அப்போதைய திமுக அரசுபல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
அந்த சமயத்தில் கொளத்தூர் மணி முக்கிய பங்கு வகித்து நடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்தார். இதன் எதிரொலியாக கொளத்தூர்மணி பெரியார் திராவிடர் கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடந்த திராவிடர் கழகத்தை தொடங்கி அதற்குத்தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
இப்போது வீரப்பனைப் பிடிக்க தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப்படை தலைவர் தேவாரம் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டைநடந்து வருகிறது.
இந்த நிலையில் அரசு கேட்டுக் கொண்டால் வீரப்பனை சந்தித்துப் பேச அரசுத் தூதராக காட்டுக்குச் செல்கிறேன் என்று மணிசமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், திங்கள்கிழமை இரவு சுமார் 9 மணி அளவில் கொளத்தூர் மணி க்யூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட கொளத்தூர் மணி எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்று தெரியவில்லை. அவர் எதற்காகக் கைதுசெய்யப்பட்டார் என்ற காரணமும் தெரியவில்லை.