For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போதை பொருள் வழக்கு: சுதாகரனுக்கு காவல் நீட்டிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போதை பொருட்கள் வைத்திருந்தது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது தொடரப்பட்டவழக்கில் அவரது காவலை அடுத்த 15 நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் அவர் நடத்திவரும் சின்ன எம்.ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் செயலாளராகஇருந்து வந்த கோபு ஸ்ரீதர் என்பவரை கொலை செய்வதாக மிரட்டியதாக கொலை மிரட்டல் வழக்கும், போதைப் பொருள்வைத்திருந்ததாக போதைப் பொருள் தடுப்பு வழக்கும் அவர் மீது தொடரப்பட்டது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சுதாகரன் செவ்வாய்க்கிழமை சென்னை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை(26.6.2001) ஆஜர் படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி தமிழ்வாணன் சுதாகரனின் காவலை மேலும் 15 நாள் நீட்டித்துதீர்ப்பளித்தார்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சுதாகரன் புதன்கிழமை முதலாவது சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்.

கொலைமிரட்டல் வழக்கில் சுதாகரன் ஜாமீன் கோரியிருந்தார். அது தொடர்பாக அவர் சென்னை இரண்டாவது நீதிமன்றத்தில்புதன்கிழமை ஆஜராக வேண்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X