For Daily Alerts
Just In
பயணிகளிடம் 400 ஜெலாட்டின் குச்சிகள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் தாம்பரம் அருகே போலீசார் 400 ஜெலாட்டின் குச்சிகளையயும் 500 டெடோனேட்டர்களையும் 2பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
சென்னையில் தாம்பரம் அருகே போலீசார் திங்கள்கிழமை இரவு வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த தமிழக அரசு பேருந்தையும் சோதனையிட்டனர்.
அப்போது அதில் பயணம் செய்து கொண்டிருந்த 2 பயணிகள் 400 ஜெலாட்டின் குச்சிகளையும், 500டெடோனேட்டர்களையும் வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இவற்றை அவர்களிடமிருந்து போலீசார்பறிமுதல் செய்தனர்.
இவர்களை போலீசார் விசாரணை செய்த போது, இவற்றை பம்மல் மற்றும் திரிசூலம் பகுதியில் பாறைகளை வெடிவைத்து தகர்ப்பதற்காக தாங்கள் எடுத்துப் போவதாக கூறினர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, June 26, 2001, 5:30 [IST]