குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க கம்யூனிஸ்டு யோசனை
சேலம்:
தமிழகம் உட்பட 4 மாநிலங்களின் குடிநீர் பிரச்சனையைத் தீர்க்க தென்னக நதிகளை இணைக்க வேண்டும். இந்த நதிஇணைப்பிற்கு வெளிநாடுகள் உதவத் தயாராக இருக்கின்றன என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் எம்.பி.யுமான த.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான த.பாண்டியன்பேசியதாவது:
சென்னையில் இப்போது குடிநீர்பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீர் பற்றாக்குறை இப்போது மட்டுமல்ல, காலங்காலமாகதீர்க்கப்படமால் இருந்து வரும் பிரச்னை. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க, இதுவரை எந்த அரசும் உரிய நடவடிக்கைஎடுக்கவில்லை.
எனவே, இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண, ஒரிசா முதல் தமிழகம் வரை உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்.இப்படி இணைப்பதன் மூலம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் பயன்பெறும். இந்த மாநிலங்களில்பாசனம் மற்றும் குடிநீர் வசதி கிடைக்கும்.
இதற்கான நிதியை டென்மார்க், நார்வே ஆகிய நாடுகள் தரத் தயாராக இருக்கின்றன. இதனைப் பெற மத்திய அரசுதான் முயற்சிமேற்கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications