இங்கிலாந்தில் சந்திரிகா... பிரதமரிடம் அதிபர் பதவி
கொழுப்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா, இங்கிலாந்தில் படிக்கும் தனது மகள்கள் யசோதா மற்றும் விமுக்தி ஆகியோரைப் பார்ப்பதற்காகபுதன்கிழமை இங்கிலாந்து சென்றார்.
இங்கிலாந்து செல்லும் முன் தனது பொறுப்புக்கள் அனைத்தையும் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகேவிடம் அவர் ஒப்படைத்தார்.இதையடுத்து விக்ரமநாயகவே தற்காலிக அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பிரதமரிடம் அதிபர் தனது அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துள்ளது இலங்கை வரலாற்றிலேயே இது தான்முதன்முறையாகும்.
இதற்கு முன் வெளிநாடு சென்ற அதிபர்கள் யாருமே தங்களது முழு அதிகாரத்தையும் பிரதமர்களிடம் ஒப்படைத்துவிட்டுச்சென்றதில்லை.
இதுகுறித்து அரசு செய்தித் தொடர்பாளர் ஆரியா ரூபாசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அதிபர் சந்திரிகா, தன் மகள்களைப் பார்ப்பதற்காக இங்கிலாந்து சென்றுள்ளார். அதிபர் நாடு திரும்பும்வரை அவரதுபொறுப்புக்கள் அனைத்தையும் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமசிங்கே கவனித்துக் கொள்வார்.
இலங்கை அரசியலமைப்புச் சட்டம் 37 (1)வது பிரிவின்கீழ, அதிபரின் பொறுப்புக்கள் அனைத்தும் பிரதமருக்குக்கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் விக்ரமநாயகேவுக்கு, தலைமை நீதிபதி சரத் என்.சில்வா தற்காலிக அதிபராகப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இலங்கை வரலாற்றிலேயே அதிபர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும்போது, பிரதமருக்கு தற்காலிக அதிபர்பதவி வழங்கியிருப்பது இதுவே முதல்முறையாகும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications