விழுப்புரத்தில் திமுகவினர் போராட்டம்
விழுப்புரம்:
முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை தி.மு.கவினர்விழுப்புரத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
அரிசி சோதனை செய்வதாகக் கூறி, விழுப்புரத்தில் உள்ள அரசு அரிசிக் கிட்டங்கிக்குள் செவ்வாய்க்கிழமைபத்திரிகையாளர்களுடன் அதிரடியாக நுழைந்தார் தற்போதைய விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருக்கும்பொன்முடி.
இதற்கான முன் அனுமதி எதுவும் பெறவில்லை என்று கூறியும், அத்துமீறி அரசு கிட்டங்கியில் நுழைந்தகுற்றத்திற்காகவும் இவரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவே போலீஸார் கைது செய்தனர்.
அவரை 15 நாள் காவலில் வைக்கும் படி தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொன்முடி கடலூர் சிறையில்அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, பொன்முடி கைது செய்யப்பட்டதை எதிர்த்து புதன்கிழமை காலை விழுப்புரத்தில் தி.மு.கவினர் மறியல்போராட்டம் நடத்த முடிவு செய்தனர். மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இருந்து மறியல் ஊர்வலத்தைஆரம்பித்தனர்.
ஆனால், ஊர்வலம் ஆரம்பமாவதற்குள்ளாகவே 50 தி.மு.கவினரை போலீஸார் கைது செய்தனர்.
இருப்பினும், விழுப்புரத்தில் இயல்பு வாழ்க்கை எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும், சாலைகளில் வாகனப்போக்குவரத்து எதுவும் தடைபடவில்லை என்றும் போலீஸார் கூறினர்.
மேலும், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் பொருட்டு, விழுப்புரம் முழுவதும் போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்.