பிஜி: இந்திய வாலிபர் மீது கொலை வழக்கு
சிட்னி:
நியுசிலாந்து மில்டன் டவுனில் 24 வயது வாலிபரைக் கொலை செய்ததாக, பிஜியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி இனத்தைச்சேர்ந்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நியுசிலாந்தில் உள்ள மில்டன் டவுன் அருகே தென் ஒடாகோ டவுனில் வசித்து வந்தவர் ரோட்னே கோலின் பீல்டு. வயது 24.இவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை விருந்து நிகழ்ச்சி ஒன்றின் போது, பிஜியில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவில்லியம் ஷியு நாராயண் சிங் (21)என்பவர் அடித்துக் கொன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு புதன்கிழமை டியூனிடிட் மாவட்ட நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜான்மெக்டொனால்ட் தனது தீர்ப்பில், இந்தக் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நாராயண் சிங் ஜூலை 2 ம் தேதி வரைநீதிமன்றக் காவலில் வைக்கப்படுவார்.
சென்டனியல் அவென்யூவில் விருந்து நடந்து கொண்டிருந்த போது இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளது. 50க்கும்மேற்பட்டோர் இந்தக் கொலையை நேரில் பார்த்துள்ளதால் சிங்தான் தான் குற்றவாளி என்பது சந்தேகத்துக்கு இடமின்றிநிருபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தக்கொலைச் சம்பவம் குறித்து 25 போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications