For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொன்முடி கைதுக்கு கருணாநிதி கடும் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி கைது செய்யப்பட்டதற்கு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கண்டனம்தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அதிமுக அரசு ஆட்சியேற்றது முதல் திமுக முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவரையும் குறி வைத்துக் கைது செய்து வருகிறது.

தற்போது பொன்முடியைக் கைது செய்துள்ளனர்.

விழுப்புரத்தில் உள்ள அரிசி குடோன் மண்டல மேலாளரிடம் அனுமதி வாங்கியபின்தான் பொன்முடி குடோனுக்குள் நுழைந்தார்.

குடோனில் வைக்கப்பட்டுள்ள அரிசியில் நல்ல அரிசி எது, புழுத்த அரிசி எது என்று தரம்பிரித்து காண்பிப்பதற்காகத்தான்அவர் குடோனுக்குச் சென்றார்.

அதிமுக அரசின் மிரட்டலுக்கு இனிமேலும் பயந்து கொண்டிருக்க முடியாது. உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர்பாதுகாப்புத்துறை அமைச்சர் தனபால் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைக் கூறி வருகிறார். இது மிகவும்கண்டனத்துக்குரியது. கைது செய்யப்பட்ட பொன்முடியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை விழுப்புரம் அரசு குடோனில் புழுத்த அரியைப் பார்வையிட விரும்புவதாகத் தெரிவித்தபொன்முடி, உள்ளே சென்று அரிசியைப் பார்வையிட்டார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் அரிசி கிடங்கின் தர ஆய்வாளர்காசிநாதன், அரிசி கிடங்கில் பொன்முடி அத்துமீறி நுழைந்ததாகப் புகார் செய்தார்.

இதையடுத்து, பொன்முடி கைது செய்யப்பட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X