மேட்டூர் அணையில் போதுமான அளவு நீர் இருப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மேட்டூர் அணையில் தற்போது உள்ள தண்ணீரை வைத்து அடுத்த மாதம் இறுதிவரை பாசனத்திற்குப் பயன்படுத்தமுடியும் என்று தமிழ்நாடு பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறின.

கடந்த ஜூன் 12ம் தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டது.நொடிக்கு 2,000 கன அடி வீதம் ஆரம்பத்தில் திறந்து விடப்பட்ட தண்ணீரின் அளவு தற்போது 11,000 கனஅடியாக உள்ளது.

அதே போல் நொடிக்கு 199 கன அடி வீதம் தற்போது மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.கர்நாடகத்தின் கபினி அணைப் பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால், விரைவில் இந்த அணைநிரம்பி, பின்னர் அங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஜூலை முதல் வாரத்தில் மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது 47டி.எம்.சி. அளவுக்கு நீர் இருப்பு மேட்டூர் அணையில் உள்ளது.

120 அடி நீர்மட்ட உயரம் உள்ள மேட்டூர் அணையில் தற்போது 85.07 அடி தண்ணீர் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+