இந்திய வரைபடம் மீது நடந்த குண்டுவீச்சு வழக்கு இடமாற்றம்
ஊட்டி:
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள இந்திய மேப்பின் மீது வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பான வழக்கு கோவை தனிநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் இந்திய வரைபடம் இருந்தது. இந்த வரைபடத்தின் மீது கடந்த 97ம் ஆண்டு சிலர் குண்டுகளைவைத்து வெடிக்கச் செய்தனர். இதில் வரைபடம் சேதமடைந்தது. இந்த வழக்குத் தொடர்பாக தமிழ்த் தீவிரவாதிகள் 12 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
குண்டு வெடிப்பு வழக்குகளை ஒருங்கிணைக்கும் முகமாக இது நாள் வரை ஊட்டி நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கு,கோவையில் உள்ள தனி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பொழிலன், பாண்டியராஜன், கலியப் பெருமாள் உட்பட 12பேர் கோவை தனி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், அடுத்த கட்ட விசாரணையை ஜூலை மாதம் 10ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications