இந்தியாவிற்கு புதிய அமெரிக்க தூதர்
வாஷிங்டன்:
இந்தியாவிற்கான புதிய அமெரிக்க தூதராக ராபர்ட் பிளாக்வெல் நியமிக்கப்பட்டுள்ளார். விரைவில் அவர்இந்தியாவிற்கு வருவார் என்று நம்பப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற ஜார்ஜ் புஷ், ராபர்ட்டை இந்தியாவின் புதிய தூதராகநியமித்துள்ளார். இவர் முந்தைய புஷ் ஆட்சிக் காலத்தில், அமெரிக்க தேசியப் பாதுகாப்புக் கவுன்சிலில் ஒரு முக்கியஅதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.
அவர் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பாகவே, இந்தியாவை புகழ ஆரம்பித்து விட்டார். இன்னும் சொல்லப்போனால், அவர் இந்தியாவுக்கு நன்றாக "சப்போர்ட்" பண்ணியே பேசி வருகிறார்.
கடந்த 1998ம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணுகுண்டு வெடித்த கையோடு, இந்தியா மீது பொருளாதாரத்தடையை அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் அமல் படுத்தினார்.
ஆனால், தன்னுடைய பதவிக் காலத்தின் இறுதியில் கிளிண்டன் இந்தியாவிற்கு விஜயம் செய்ததிலிருந்தேஅமெரிக்காவின் அணுகுமுறையில் ஏகப்பட்ட மாறுதல்கள் தெரிந்தன; இப்போதும் தெரிகின்றன.
விரைவில் இந்தியாவின் மீதான பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றும் நீண்ட நாட்களாகவேஎதிர்பார்க்கப்பட்டும் வந்தது.
ராபர்ட் கூறுகையில், "இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் தோல்வியடைந்து விட்டன.அதனால் இத்தடையை உடனடியாக நீக்க வேண்டும்" என்று கூறி அமெரிக்க அரசாங்கத்தை வற்புறுத்தஆரம்பித்துள்ளார்.
இவர் இப்படிக் கூறினாலும், அணு ஆயுதத் தடை ஒப்பந்தமான என்.டி.பி.டியில் கையெழுத்திட வேண்டும் என்றுஅமெரிக்காவும் இந்தியாவைத் தொடர்ந்து வற்புறுத்தும்.
இந்நிலையில், விரைவில் இந்தியா வந்து அமெரிக்க தூதராகப் பதவி ஏற்கவிருக்கும் ராபர்ட்டும் இதற்கான"பொடி"களை அமெரிக்க அரசிடம் தூவி வருகிறார். அநேகமாக, அவர் இந்தியா வருவதற்குள் இந்தப்பொருளாதாரத் தடை நீங்கினால்கூட ஆச்சர்யம் இல்லை.
இந்தியா-அமெரிக்காவிற்கு இடையே தொழில், வர்த்தகம் முதலான பல வர்த்தக ஒப்பந்தங்களையும் நீண்டகாலமாகக் கவனித்து வருபவர் ராபர்ட். மேலும், தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் இந்த 2 மிகப் பெரும்குடியரசுகளும் ஒத்த கருத்துக்களைக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அனைத்து வழிகளையும் "பாஸிட்டிவ்"வாகவே ராபர்ட் யோசித்து வைத்திருப்பதால், இவர் இந்தியாவிற்குவந்த பிறகு, யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இந்திய-அமெரிக்க உறவு அவ்வளவு நெருக்கமாகஇருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications