சொத்துக் குவிப்பு: நீதிமன்றத்தில் சுதாகரன் ஆஜர்
சென்னை:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன்புதன்கிழமை சென்னை சைதாப்பேட்டை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
இவர் மேல் தொடரப்பட்டுள்ள வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன், வழக்குவிசாரணையை ஜூலை 4 ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
முன்னதாக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன்,இளவரசி ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
ஏற்கனவே சுதாகரன் ஜெயிலில் தான் இருந்து வருகிறார். போதைப்பொருட்கள் வைத்திருந்தது மற்றும் உதவியாளரைதுப்பாக்கியைக் காட்டி மிரட்டியது போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டுள்ள சுதாகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இந்த மாதம் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications