தென்னக ரயில்வேயின் புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள்
சென்னை:
தென்னக ரயில்வே புதிதாக சில எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புதிதாக விடப்பட்டுள்ள எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்:
சென்னை-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ்
திருவனந்தபுரம்-பாலக்காடு எக்ஸ்பிரஸ்
எர்ணாகுளம்- ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ்
எர்ணாகுளம்-புனே எக்ஸ்பிரஸ்
தற்போது சென்னை-நாகர்கோவில் இடையே வார இறுதி நாட்களில் இயக்கப்படும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இனிநிரந்தரமாக்கப்படும்.
எலெக்ட்ரிக் டிரெயின் நேரம் மாற்றம்:
மேலும், சென்னை நகரில் புறநகர் ரயில்களின் புறப்படும் நேரங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வாரநாட்களில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் இனிமேல் 10 நிமிடத்திற்கு ஒருமுறை புறப்பட்டுச் செல்லும்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த ரயில்கள் 20 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என்று தென்னகரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications