கரும்பு தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

காரமடை:

வீரப்பன் நடமாட்டமுள்ள மலைப் பகுதியிலிருந்து வந்த யானைகள் கரும்புத் தோட்டங்களில் புகுந்து அட்டகாசம் செய்துவருகின்றன.

இந்த யானைகளை விரட்ட பயிற்சி பெற்ற யானைகளை வனத் துறையினர் பணியில் ஈடுபடுத்தியுள்ளனர்.

காரமடை பகுதியிலிருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் கன்னார் பாளையம் உள்ளது. இந்த பகுதியில் மலைப் பகுதி யானைகள்கும்பல் கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து கரும்புப் பயிரை நாசம் செய்தன.

இவற்றை விரட்ட பொதுமக்கள் ராக்கெட் வெடிகளைப் பயன்படுத்தினர். அப்போது எதிர்பாராதவிதமாக கரும்புக் காட்டில் தீபற்றி பரவியது. இந்த தீயைப் பார்த்த யானைகள் மிரண்டு ஓடின. இவை சிறிது தூரம் சென்று மீண்டும் முகாமிட்டுள்ளன.

இந்த யானைக் கூட்டம், வீரப்பன் தேடுதல் வேட்டை நடந்து வரும் லிங்காபுரம், நெத்திக் குட்டை, சிறுமுகை, பெரியகள்ளிப்பட்டி, குமரன் குண்டு, வடவள்ளி ஆகிய பகுதிகளிலிருந்து வந்துள்ளன.

இந்த யானைகளை விரட்ட பொள்ளாச்சி வனப் பகுதியிலிருந்து இரண்டு யானைகள் கொண்டு வரப்பட்டன. இது தவிர சிலயானைப் பாகன்களும் வந்து யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+